பிச்சைக்காரர்களின் தேசம்
நான் சராசரியாக நாளொன்றுக்கு 18-20 மணி நேரம் உழைக்கிறேன். என்னுடைய மாத சம்பளத்திலிருந்து பைசா சுத்தமாக கணக்கு பண்ணி வருமான வரி அரசாங்கத்திற்கு போகிறது. இதுவரை வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை, செய்யவும் முடியாது - காரணம், அலுவலகங்களிலேயே வரி மற்றும் இதர பிடிப்புகள் போகத்தான் சம்பளம் கணக்கிற்கு வருகிறது. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு வரியாகப் போகிறது. நான் மட்டுமல்ல, என்னைப்போல் ஐ.டி. யில், மென்பொருள் துறையில், கன்சல்டிங்கில், உற்பத்தித்துறையில்...என அனைவரின் உழைப்பின் ஒரு பகுதி வரியாக அரசாங்கத்திற்குப் போகிறது. அரசாங்க கஜானாவின் ஒரு பகுதி நம் வரிப்பணத்தால்தான் நிறைகிறது. நிற்க.
இதெல்லாம் இப்படியிருக்க, இவர்கள் விடும் தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளைப் பார்க்கும்போதெல்லாம் பற்றிக்கொண்டு வருகிறது. எல்லாம் இலவசம் - டி.வி. இலவசம், மிக்ஸி இலவசம், கிரைண்டர் இலவசம், ...ஜட்டியும் கூட இலவசம். ஏண்டா டேய்...நாங்க உழைச்சு உழைச்சு வரியாக் கொட்டுவோம், நீங்க மசுரே போச்சுனு 'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டிங்க கையே'னு ஊருக்கெல்லாம் இலவசமா குடுப்பீங்களா? இன்னும் எத்தனை நாட்களுக்கு எங்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்க உத்தேசம்.
எத்தனையோ கிராமங்களில் மின்சார வசதி இல்லை, நல்ல சாலை வசதி இல்லை, குறைந்த பட்ச மருத்துவ வசதிகள் இல்லை, குடி நீர் இல்லை, குண்டி கழுவ தண்ணீர் இல்லை...கழுவ என்ன கழுவ...முதலில் நல்ல கழிப்பிட வசதியில்லை. பெரு நகரங்களில் மட்டும் என்ன, நல்ல பொதுக்கழிப்பிடங்கள் இருக்கிறதா? பெரிதாய்ப் பீற்றிக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை விடும் பெருந்தலைவர்களே, உங்களால் ஒரே ஒருவேளை இந்த பொதுக்கழிப்பிடங்களை உபயோகப்படுத்த முடியுமா? அப்புறம் என்ன இழவிற்கு இலவச லேப்-டாப்பும் இலவச மிக்ஸியும்?
ஐயா பெருந்தலைவர்களே, எங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகவே தந்து எங்களைக் கேவலப்படுத்தாமல், இவை எல்லாவற்றையும் எங்கள் உழைப்பால் நாங்களாகவே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துங்கள், அதற்கான சமூக, பொருளாதார மாற்றங்க்களை கொண்டு வாருங்கள். எனக்கு எந்த கட்சி இலவசமாக மிக்ஸி கொடுக்கிறது என்று பார்ப்பதை விட, எந்த பிராண்ட் மிக்ஸி எனக்குத் தேவை என்று நானே பார்த்து வாங்கிக்கொள்ளும் அளவிற்கு என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினால், உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்.
இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, நம் மக்களை சொல்ல வேண்டும். எனக்கு பிச்சைக்காரனாகவே இருப்பதுதான் பிடிக்கிறது என்பவர்களை என்ன செய்வது. பொருளாதார அறிவியலில் ஒன்று சொல்வார்கள் - 'there is no such thing as a free lunch' - இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இலவசமும் இன்னொருவரின் உழைப்பால் வந்தது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இலவச டி.வி.களும், மிக்ஸிகளும் உங்களை மகிழ்விக்குமேயானால், நீங்களும் ஒரு வகையில் திருடர்கள்தான் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
-- ஷோபன்
9 comments:
Good one shoban ..
lets c,,,
well said shoban ....
aahaa// ஆஹா .. நல்ல விழிப்புணர்வுக்கட்டுரை
வாங்க வினோத், நன்றி.
வாங்க சி.பி., நன்றி.
Excellent! you had the views of many right thinking people in Tamilnadu
Dear Shoban.. Nacchunu oru katturai.. idhu ellarukkum uraikanum.
Dear Shoban, nachhunu oru katturai.. en iniya thamizh makkalukku indravathu uraikkattum.
Dear Shoban... en iniya thamizh makkalukku indravathu uraikattum..
Dear Shoban... en iniya thamizh makkalukku indravathu uraikattum..
Post a Comment