18 March, 2011

மீண்டு(ம்) நான்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வணக்கம். நானும் வலைப்பூ ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இது. எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, இது சாதாரண வேலையில்லை, குறைந்தபட்ச உழைப்பாவது தேவை என்று. வெறுமனே வந்து ஜல்லியடித்துவிட்டுப் போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்போதிருந்து பிற வலைப்பதிவுகளை படிப்பதோடு சரி.

அதெல்லாம் சரி, இப்போது எதற்கு மீண்டும் என்று கேட்கிறீர்களா? வேலைப்பளு மிக அதிகமாகி விட்டது - ஒரு வடிகாலாக இந்த வலைப்பூவை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். குறைந்தபட்சம் வாரம் ஒரு பதிவாவது இட முடியுமா என்று பார்க்கலாம். எனக்கு அவ்வளவு நன்றாக எழுத வராது, பரவாயில்லை, எழுதிப்பழகலாம் - ஒரு சினிமாவைப் பற்றியோ, அழகான பாடலைப் பற்றியோ, நல்ல புத்தகத்தைப் பற்றியோ, தொழில் துறை/ நுட்பங்களைப் பற்றியோ - எதையாவது எழுதிப்பார்ப்போம்....

....பார்போம், எவ்வளவு நாள் இது தொடர்கிறது என்று.

-ஷோபன்

4 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் ஷோபன்.. நல்ல பதிவுகளை சிறியதாயினும் அருமையாக எழுதலாமே !!! நீங்கள் நன்றாகத் தான் எழுதுகிறீர்கள். தொடருங்கள் .... வாழ்த்துக்கள் சகோ.

தனிமரம் said...

எல்லோறும் வேலைப்பளு காரமாக ஓதுங்கினால் நாங்க என்ன செய்வது அண்ணா

ஷோபன் said...

@ இக்பால் செல்வன்
வாருங்கள் இக்பால். வாழ்த்துகளுக்கு நன்றி. என்னால் முடிந்த அளவிற்கு முயற்சிக்கிறேன். உங்களைப் போன்றோர்களின் உதவி, வழிகாட்டுதலில் மீண்டும் தொடர முடியுமென்று நினைக்கிறேன். நன்றி.

ஷோபன் said...

@ Nesan
வாருங்கள் நேசன். உங்களைப் போன்றோர்களின் உதவி, வழிகாட்டுதலில் மீண்டும் தொடர முடியுமென்று நினைக்கிறேன். நன்றி.