30 December, 2006

15. அனுவின்றி ஓர் அணுவும்

ஒரு முக்கியமான டிஸ்கி:
ஒரே உச்சரிப்பைக் கொண்டிருக்கும் வேறு வேறு வார்த்தைகளைப் பற்றி யோசித்து கொண்டிருக்கும் போது தோன்றியது இது.
ஒருவேளை எனக்கு ஒரு காதலி இருந்து அவளுக்கு அனு என்று பெயரும் இருந்தால்...எப்படி என் லாவகமான சிந்தனை :-)
------------------------------------------------------------
அவனின்றி
ஓர் அணுவும்
அசையாது
அது சரி

ஆனால் எனக்கு
அனுவின்றி
ஓர் அணுவும்
அசையாதே.
-----------------------------------------
அனு ஒருமுறை
என்னிடம் கேட்டாள்
"நான் குண்டானா
உனக்குப் பிடிக்குமா?"

நான் சொன்னேன்
"அய்யோ வன்முறை
வேண்டாம், எனக்கு
அனுகுண்டுனா பயம்".

அப்போது வெடித்துக்
கிளம்பிய சிரிப்பில்
சிதறிப் போனவன்தான்
நான்.
---------------------------------------
அணுக்களால் ஆனது
உலகம் - இது அறிவியல்

அனுவால் ஆனது
நான் - இது காதல்
---------------------------------------
அணுக்கதிர் வீச்சிலிருந்து
கூட தப்பிவிடலாம்
ஆனால் அனு-கண்
வீச்சிலிருந்து...
--------------------------------------
"அணு அறிவியல்
தெரியுமா உனக்கு?"
என்றாய் நீ.

"அனு அறிவியல்
தான் தெரியும்"
என்றேன் நான்.

வெட்கத்தில்
சிரித்தாய் நீ.

அப்போது என்மனதில்
நிகழ்ந்தது தான்
அனுக்கரு சிதைவு.
----------------------------------------
எலெக்ட்ரான்கள் எல்லாம்
அணுக்கருவைச் சுற்றிச்
சுற்றி வருமாம்

நான் அனுவை
சுற்றிச் சுற்றி
வருவதைப் போல.
---------------------------------------

14 comments:

k4karthik said...

'அனு'பவிச்சு எழுதிருக்கிறீங்க....

Anonymous said...

vanakam,
ungal kavithai arumai... enakum anu vindri oer anuvun asaiadhu.. enna en amma peru anu...
valthukal
barathi

ஷோபன் said...

வாங்க K4K,

எழுதுறது ஒன்னாம் வாய்ப்பாடா இருந்தாலும் அனுபவிச்சு தான எழுதனும், என்ன சொல்றீங்க...:-)

ஷோபன் said...

வாங்க பாரதி,

பாராட்டுக்களுக்கு நன்றி. உங்க அம்மாவின் பெயர் அனுவா? உங்கள மாதிரி அம்மா மேல பாசமா இருக்குற பசங்கள பாத்தா எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி, அடிக்கடி வாங்க.

k4karthik said...

//ஒன்னாம் வாய்ப்பாடா இருந்தாலும் அனுபவிச்சு தான எழுதனும்//

ரொம்பச் சரி!!

MyFriend said...

அனு அனு-ன்னு எழுதியிருகீங்க.. மத்தவங்க இதை படிப்பாங்க ரசிப்பாங்க.. ஆனால், நான் ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்லை. ஏன் தெரியுமா?

MyFriend said...

அனு அனு-ன்னு எழுதியிருகீங்க.. மத்தவங்க இதை படிப்பாங்க ரசிப்பாங்க.. ஆனால், நான் ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்லை. ஏன் தெரியுமா?

MyFriend said...

இந்த பின்னூட்டம் எழுதும்போது, உங்களுடைய இந்த பதிவு என் கையில் பி.டி.எஃப் வடிவமாக.. ;-)
எனக்கு இது ப்டித்ததுக்கு காரணம் நான் அனு. ;-)

ஷோபன் said...

என் இனிய தோழி,

முதலில் ஒரு தேங்ஸ் அப்புறம் ஒரு சாரி. பதிவப் படிச்சிட்டு சந்தோஷப்பட்டதுக்கு தேங்ஸ், உடனே அதுக்கு பதில் போட முடியாததுக்கு சாரி. ஒரு நாளு நாளா வைரல் காய்ச்சல், அதான் ஒன்னுமே பண்ண முடியல.

//ஆனால், நான் ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்லை. ஏன் தெரியுமா? //

ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு நன்றி, ஆனா ஏனுங்க தோழி?

//எனக்கு இது பிடித்ததுக்கு காரணம் நான் அனு. ;-) //
அப்பிடின்னா.... உங்க பேரு அனுங்களா? புரியவில்லை தோழி.

MyFriend said...

// உடனே அதுக்கு பதில் போட முடியாததுக்கு சாரி. //

பரவாயில்லைங்க.. நானே உங்களுக்கு பதிலை இப்போதுதானே போடுகிறேன்..

இப்போ காய்ச்சல் எதுவும் இல்லையே? are you fine now?

//அப்பிடின்னா.... உங்க பேரு அனுங்களா? புரியவில்லை தோழி. //

ஆமாங்க.. என்னுடைய முழுப்பெயர் அனு்ராதா. நீங்க மை ஃபிரண்ட்-ன்னே கூப்பிடலாம்.. இதுதான் வலையுலகில் என்னை அறிந்தவர்கள் கூப்பிடுவது.. ;-)

ஷோபன் said...

என் இனிய தோழி,

இப்பொழுது பரவாயில்லை, தேறிவிட்டேன். நன்றி.

MyFriend said...

1 1/2 மாதங்கள் ஆச்சு! புதுசா ஏதாவது எழுதுங்கள்.. ;-)

Anonymous said...

Anuvum anuvum onru sernthal
ekka chakka kummalam umakku

Anuvai anu anuvaai anubavithu rasithen nan
Ungaludaya karpanai kavithai anu(bavam)
melum valarga!!

Nanri..Vazhthukkal Araichiyalare

- Kannambuchi

ஷோபன் said...

வாங்க கண்ணாம்பூச்சி,

//Anuvai anu anuvaai anubavithu rasithen nan//

அனுவை அணு அணுவாய் ரசித்தீர்களா, நன்றி. சாரிங்க பதில் போடுவதற்கு லேட் ஆயிடிச்சு. அடிக்கடி வாங்க.