11 December, 2006

11. பிடிமானமில்லாமல் சிறுநீர் கழிக்கும் திறன்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வேலை செய்யும் போதோ அல்லது எதையாவது பார்க்கும் போதோ சட்டென்று சில பாடல்களோ அல்லது கவிதையோ நினைவிற்கு வரும். அது அந்தச் சந்தர்பத்திற்குப் பொருத்தமாகவோ அல்லது பொருத்தமற்றோ கூட இருக்கலாம்.

அதே போல் எனக்கு தினமும் குளிக்கும் போது வைரமுத்துவின் இந்த கவிதை நினைவிற்கு வரும்.

"குளிக்கும் வரை நினைவிருக்கும்
குளிக்கும் போது மறந்தே போகும்
காது மடல் தினம் கழுவியதில்லை"

இதே போல் ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் கழிப்பறையை உபயோகிக்கும் போது இது நினைவிற்கு வரும்.

"ஓடும் ரயிலில் பிடிமானமில்லாமல்
சிறு நீர் கழிக்கும் திறனுமில்லை"


(இதற்கு கலைஞர் கருணாநிதி தன் முன்னுரையில் கேலியாக " நல்ல வேளை கவிஞர் எந்த பிடிமானம் என்று சொல்லவில்லை" ;-)).

மேலே குறிப்பிட்ட இரண்டுமே ஒரே கவிதையில் வரும் இரு வேறு பத்திகள். கவிஞர் இதே போல் தன்னுடைய பல குறைகளைச் சொல்லிக்கொண்டே போய் "இவ்வளவு குறைகள் இருந்தும் என்னுள் எப்படி நிறைந்து வழிகின்றாய் தமிழே" என்பது போல் முடிப்பார் (பார்க்க: வைரமுத்து கவிதைகள் அல்லது இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்று நினைக்கிறேன் மேலும் மிகச் சரியாக வார்த்தைகள் நினைவில் இல்லை, மன்னியுங்கள்).

இதே போல் உங்களுக்கு சில பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் நினைவிற்கு வருவதுண்டா?

No comments: