19 November, 2006

3. டங்கா டுங்கா தவிட்டுகாரி

இன்று தான் பருத்தி வீரன் பாடல்கள் கேட்டேன். நன்றாகவே செய்திருக்கிறார்கள். இதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் டங்கா டுங்கா தவிட்டுகாரி. கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு இந்த பாடல் கண்டிப்பாக பிடிக்கும்.


இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியிருப்பவர்கள்: பாண்டி, லக்ஷ்மி, ராஜா, சரோஜா, கலா

இந்த பாடலில் சிறப்பான விசயமே, தொழில் முறை பிண்ணணிப் பாடகர்களைத் தவிர்த்து கலைக் குழுவைச் சேர்ந்தவர்களையே பாட வைத்ததுதான். பொதுவாக இவர்களுக்கென்றே தனிப்பட்ட குரல் வாய்த்திருக்கிறது. இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதலாம். கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.
இதைத் தவிர ஊரோரம் புளியமரம் பாடலும் அருமை.
பாடியிருப்பவர்கள்: பாண்டி, லக்ஷ்மி, சரோஜா, கலா
கேளுங்கள், மண் வாசணையை அனுபவியுங்கள்.

No comments: